Showing posts with label உறையூர் கல்யாணி. Show all posts
Showing posts with label உறையூர் கல்யாணி. Show all posts

2. உறையூர் கல்யாணி | (இரட்டைக் களை) | ஆதி




பல்லவி

உழுபடைச் சாலின்கீழ் மிதிலைச் செல்வியும்
துழாய்ச் செடியின் கீழ் பாவைச் செல்வியும்,
அழகிய மணவாளனை மணக்கவே
தாமரையில் பிறந்தாள் உறையூர்ச் செல்வியே. (உழுபடை)

அனுபல்லவி

அழியா அமரரும் தேவியருடனே
ஆடல்பாடலுடன் உறைந்த உறையூரே.
கோழியும் இறையருள் பெற்று யானையை
விரட்டித் துரத்தியதும் கோழியூரே. (உழுபடை)

சரணம்

ஆழ்வாரில் பாணரும் எழிலரங்கனின்
ஸ்ரீ வத்ச அம்சமாய்ப்பிறந்த ஊரே.
ஆழி சங்கேந்தும் கூடலழகனே,
கடல்வண்ணனாம் உறையூரானே.
அழகிய மணவாளன் அரங்கனையே
கமலவல்லியும் மணந்ததது கண்டு
எழிலுடை அரங்க நாயகியும்
ஊடல் ஊசலும் செய்கின்$ரே. (உழு படை)

Share:

நாராயணனை தேடி

ஸ்ரீமதே கோபால தேசிக மஹா தேசிகாய நம:
ஸ்ரீமதே ஸ்ரீநிவாசாய மஹா தேசிகாய நம:

ஸ்ரீமதே நிகமாந்த மஹாதேசிகாய நமஈ ஸ்ரீமதே ராமானுஜாய நம:

ஸ்ரீ கோமள வல்லி நாயிகா ஸமேத ஸ்ரீ அபர்யாப்தாம்ருத பரப்ரம்மணே நம:

ஸ்ரீ ரங்கநாயிகா ஸமேத ஸ்ரீ ரங்கநாத பரப்ரம்மணே நம:

ஸ்ரீ அலர்மேல் மங்கா ஸமேத ஸ்ரீநிவாஸ பரப்ரம்மணே நம: