3. தஞ்சை மாமணிக் கோவில் | லலிதா | ஆதி




பல்லவி

நெஞ்சினில் நினைத்தாலே இனித்திடும் தேவனே
தஞ்சை மாமணிக் கூட நீலமேகமே (நெஞ்சினில்)

அனுபல்லவி

செஞ்சுடர் ஆழியானே செங்கமல வல்லி நாதனே.
தஞ்சை மாமணியாய் நின்ற காவல்தெய்வமே. (நெஞ்சினில்)

சரணம் 1

தஞ்சகன் தண்டகன் தாரகன் மூவரின்
வஞ்சகம் அழிந்திட மூவராய் வந்தாய்.
தஞ்சகன் சரணடைய தஞ்சாவூர் பிறந்ததே.
அஞ்சிய தாருகனழிய மணிக்குன்றம் வந்ததே ((நெஞ்சினில்)

சுரணம்2

வெஞ்சின அரவம் தனில் துயில்கின்ற மாதவனே.
அஞ்சிறைப் புள்ளும் ஊர்ந்திடும் மாலவனே.
அஞ்சேலென்றெனை ஆட்கொள்ளும் தூயவனே.
மஞ்சுசூழ் வெண்ணாற்றங்கரை வாழும் நாயகனே
(நெஞ்சினில் )
Share:

0 comments:

Post a Comment

நாராயணனை தேடி

ஸ்ரீமதே கோபால தேசிக மஹா தேசிகாய நம:
ஸ்ரீமதே ஸ்ரீநிவாசாய மஹா தேசிகாய நம:

ஸ்ரீமதே நிகமாந்த மஹாதேசிகாய நமஈ ஸ்ரீமதே ராமானுஜாய நம:

ஸ்ரீ கோமள வல்லி நாயிகா ஸமேத ஸ்ரீ அபர்யாப்தாம்ருத பரப்ரம்மணே நம:

ஸ்ரீ ரங்கநாயிகா ஸமேத ஸ்ரீ ரங்கநாத பரப்ரம்மணே நம:

ஸ்ரீ அலர்மேல் மங்கா ஸமேத ஸ்ரீநிவாஸ பரப்ரம்மணே நம: